
மதுக்கூர் பேரூராட்சி நியமன குழு உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் இன்று 27/02/2012 திங்கட்கிழமை காலை பேரூராட்சி அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் நடைப்பெற்றது.
15 வார்டு உறுப்பினர்களை கொண்ட மதுக்கூர் பேரூராட்சியில் நியமன குழு தேர்தலை 13 வது திமுக கவுன்சிலர் சுரேஷ் அவர்கள் புறகணித்தார்.மீதமுள்ள 14 கவுன்சிலர்களில் 9வதுவார்டு கவுன்சிலரும், மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளருமாகிய சகோதரர் மு.கபார் அவர்கள் அதிமுக ஆதரவுடனும்,14 வது வார்டு கவுன்சிலர் சகோதரர் மணிவேல் அவர்கள் திமுக சார்பிலும் போட்டியிட்டனர்.இத்தேர்தலில் சகோதரர் கபார் அவர்களுக்கு 8 வாக்குகள் கிடைத்தது.சகோதரர் மணிவேல் அவர்களுக்கு 6 வாக்குகள் கிடைத்தது.
8 வாக்குகள் பெற்ற சகோதரர் M.கபார் நியமன குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். (எல்லா புகழும் அல்லாஹுக்கே )
வாழ்த்துக்கள்.........
ReplyDelete