இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, December 5, 2014

மதுக்கூரில் அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே !
டிசம்பர் 6,2014 பாபர் மஸ்ஜித் இடித்து 22 வருடங்களை நினைவுபடுத்துகிறது.இந்த தருணத்தில் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டுகின்றேன்.அப்பொழுது தான் நம்முடைய நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஊறு விளைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.மேலும் அன்றைய பிரதமர் திரு.நரசிம்மராவ் அவர்கள் இந்த தேசத்திற்கு உறுதி அளித்தபடி மசூதி இருந்த இடத்திலேயே மீண்டும் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுகொள்கின்றேன்.














என்ற வாசகம் கொண்ட அஞ்சல் அட்டைகள் ஜனாதிபதிக்கு அனுப்பும் பணியினை கடந்த 01/1/2014 தமிழகம் முழுவதும் சமுதாய போராளிகளை கொண்ட தமுமுக மிகவும் துரிதமாக நடத்தியது.அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தின் கடைசி நாளான இன்று தமிழகம் முழுதுவம் தமுமுக செயல்வீரர்கள்  உள்ளூர் இஸ்லாமிய சேவை இயக்கங்களின் உறுதுணையுடன் சிறப்பாக களப்பணியாற்றினார்கள்.

மதுக்கூரில் உள்ள அஞ்சலத்தில் இன்று 05/12/2014 வெள்ளிக்கிழமைஜும் ஆ தொழுகைக்கு பின்னர் தமுமுகவின் அனைத்து நிர்வாகிகளும் ஜமாத்தார்கள்,பொதுமக்கள்,மாணவர்கள்,தாய்மார்கள்,இளைஞர்கள்,தொப்புள் கொடி உறவுகள்,வர்த்தகர்களிடமிருந்து பெற்ற சுமார் 1000 மேற்பட்ட அஞ்சல் அட்டைகளை அஞ்சல் செய்தார்கள்.

எல்லா புகழும்  அல்லாஹ் ஒருவனுக்கே !

ஆதரவு அளித்த அன்பு உள்ளங்களுக்கு எங்களின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.


No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...