இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, December 4, 2014

மதுக்கூரில் சாலை மறியல்
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு 4 புதிய அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று டெல்டா மாவட்டம் முழுவதும் சாலை மற்றும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகின்றது.மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.இளங்கோ அவர்கள் தலைமையில் அனைத்துக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சாலை மறியல் போராட்டத்தால் மதுக்கூரில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த சாலை மறியல் போராட்டத்தில் பேரூராட்சி தலைவர் NSM பசீர் அகமது,மாவட்ட திமுக பிரதிநிதி SNS ஹாஜா முகைதீன்,மனிதநேய மக்கள் கட்சி முன்னாள் செயலாளர் M.முஜிபுர் ரஹ்மான்,கவுன்சிலர்கள் M.கபார் (மமக),மணிவேல்(திமுக)NPM ரியாஸ் அகமது (திமுக) மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டார்கள்.பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.





No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...