ஹிஜாப் எங்கள் வாழ்வின் எவ்வித முன்னேற்றத்திற்கும் தடையாக இல்லை என்பதை தங்களது சாதனைகள் மூலம் நிரூபித்து வருகின்றார்கள் முஸ்லிம் பெண்கள்.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கி வருகிற பிப்ருவரி 28ஆம் தேதி வரை கனடா நாட்டின் வான்கோவரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் பனிச்சறுக்குத் தொடர்பான பல போட்டிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஜியண்ட் ஸ்லாலோம் மற்றும் ஆல்பைன் ஸ்லாலோம் போட்டிகளில் ஈரான் நாட்டு சார்பாக ஹிஜாப் அணிந்துக் கொண்டே பங்கேற்கிறார் மர்ஜான் கல்ஹோர் என்ற முஸ்லிம் பெண். இவர் ஈரானின் சார்பாக கலந்துக் கொள்ளும் முதல் பெண்மணியாவார்.
ஈரான் சார்பாக துவக்க விழாவில் கொடியை ஏந்தி வந்தவரும் இவரே. 21 வயது மருத்துவ பட்டப்படிப்பு மாணவியான கல்ஹோர் கூறுகையில், "இந்த ஒலிம்பிக் எனது கனவாகும். எனது இந்த பங்கேற்பு ஈரானிய பெண்களை ஊக்குவிக்கும். பெரும்பாலான பெண்கள் பனிச்சறுக்கு போட்டிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நான் ஒரு முன்மாதிரியாக திகழ்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் எனது தலைமுடியை மறைப்பதில் மிகவும் கவனமாக உள்ளேன். எனது தலைமுடி குட்டையானது. ஆதலால் ஒரு தொப்பியை அணிந்துள்ளேன். அதன்மேல் ஹெல்மட் அணிந்துள்ளேன்." என்கிறார் கல்ஹோர்.
விளையாட்டுப் போட்டிகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்துக் கொண்டு கலந்துக் கொள்வதற்கு மேற்கத்தியவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, February 27, 2010
நபிகளாரின் வரலாறு - சிறந்த நூலுக்கு ஒரு இலட்சம் பரிசு!
அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய எல்லாம் வல்ல இறைவனின் திருப் பெயரால்...
அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
இறைவனின் சாந்தியும், சமாதனமும் நம்மனைவரின் மீதும் உண்டாவதாக!
சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் மற்றுமோர் சிறந்த முயற்ச்சி!
உலகப் பெருந் தலைவர் அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாற்றினை இனிய, எளிய தமிழில், ஆதாரங்களின் அடிப்படையில், ஆய்வு நடையில் எழுதப்படும் சிறந்த நூலுக்கு ஒரு இலட்சம் பரிசு! 450 பக்கங்களில் கணிணி அச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்: 31.10.2010.
முகவரி:
RAHMATH PATHIPPAGAM
RAHMATH BUILDING
No.6, IInd Main Road,
C.I.T. Colony, Mylapore,
Chennai 600 004.
Tamil Nadu, India.
Phone Number : + 91 44 24997373
தொடர்புக்கு: M.A.முஸ்தபா, கைபேசி: +91-95000 37000.
அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
இறைவனின் சாந்தியும், சமாதனமும் நம்மனைவரின் மீதும் உண்டாவதாக!
சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் மற்றுமோர் சிறந்த முயற்ச்சி!
உலகப் பெருந் தலைவர் அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாற்றினை இனிய, எளிய தமிழில், ஆதாரங்களின் அடிப்படையில், ஆய்வு நடையில் எழுதப்படும் சிறந்த நூலுக்கு ஒரு இலட்சம் பரிசு! 450 பக்கங்களில் கணிணி அச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்: 31.10.2010.
முகவரி:
RAHMATH PATHIPPAGAM
RAHMATH BUILDING
No.6, IInd Main Road,
C.I.T. Colony, Mylapore,
Chennai 600 004.
Tamil Nadu, India.
Phone Number : + 91 44 24997373
தொடர்புக்கு: M.A.முஸ்தபா, கைபேசி: +91-95000 37000.
Thursday, February 25, 2010
சென்னையில் மாணவர்களின் உணர்ச்சிமிகு பேரணி! தமுமுக மாணவரணி பங்கேற்ப்பு !
மத்திய மனிதவள மேம்-பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் மத்திய அமைச்சர் கபில்சிபல் கொண்டுவந்துள்ள தேசிய உயர்கல்வி ஆணைய மசோதா இந்தியாவில் உள்ள அனைத்து பிற்-படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவ சமுதாயத்திற்கு பேரிடியாக அமைந்துள்ளதை எதிர்த்து, திக,தமுமுக மாணவரணி,விடுதலை சிறுத்தைகள் உட்பட மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து அனைத்து மாணவர் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினர்.அனைத்து மாணவர் கூட்டமைப்பின் சார்-பில் மாபெரும் பேரணி சென்னையில் 23.2.2010 மாலை எழுச்சி-யுடன் நடைபெற்றது.
இந்தியாவில் மீண்டும் மனுதர்ம கல்வித் திட்டத்தை புகுத்தும் மத்திய அமைச்சர் கபில்சிபலைக் கண்டித்தும், உயர்கல்வி தேசிய ஆணைய மசோதாவை எதிர்த்தும் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் அனைத்து மாணவர் பேரவை சார்-பில் மாணவர்கள் மன்றோ சிலை அருகில் கூடினர்.

ஒடுக்கப்பட்ட, கிராமப்-புற மாணவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் உயர்கல்வி தேசிய ஆணைய மசோதாவை-யும், மத்திய மனுதர்ம அமைச்சர் கபில்சிபலைக் கண்டித்தும் அரை மணி நேரம் ஒலி முழக்கமிட்டனர்.
பின்னர் அனைத்து மாணவர் கூட்டமைப்பினரான திராவிட மாணவர் கழகம், விடுதலை சிறுத்தைகள் மாணவர் பிரிவு, தமுமுக மாணவரணி, முஸ்லிம் லீக், சட்டக் கல்லூரி மாணவர்கள், புதுக்கல்லூரி மாணவர்-கள், நந்தனம் கல்லூரி மாணவர்கள், பச்சையப்-பன் கல்லூரி மாணவர்-கள் என மாணவர்கள் பேரணி-யாகப் புறப்படத் தயாராக இருந்தனர்.
திராவிடர் கழக பொதுச்-செயலாளர் கவிஞர் கலி.-பூங்குன்றன் மாணவர்களின் பேரணி தொடங்கி வைக்கும் முகமாக மாண-வர்களை வாழ்த்தியும், அனைத்து மாணவர் கூட்டமைப்பின் நோக்கத்தை விளக்கியும் பேசினார்.

அவரது உரையில் கூறியதாவது:இன்றைக்குத் தேசிய உயர்கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்தும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்ச-ரைக் கண்டித்தும் மாண-வர்கள் பேரணியாகப் புறப்பட்டு அவர்களு-டைய கோரிக்கைகளை வலி-யுறுத்த உள்ளனர்.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் அவர்கள் ஒரு புதிய கல்விக் கொள்கைத் திட்-டத்தை அறிவித்திருக்கிறார்.தாழ்த்தப்பட்ட, பிற்-படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் கல்வியில் முன்னேறவிடாமல் தடுக்க ஒரு புதிய சட்டத்தை, திட்டமிட்டு ஒரு சதிச் செயலை கபில்சிபல் உருவாக்கியிருக்கிறார்.நீண்ட காலமாக நாம் போராடிப் பெற்ற இடஒதுக்கீடு, சமூகநீதி தத்-துவத்தை குழிதோண்டிப் புதைக்கக் கூடிய திட்டம்-தான் இந்த கல்வித் திட்டமாகும்.தமிழ்நாட்டில் இருபத்-திரண்டு ஆண்டுகளாக நாம் போராடி, விரட்டப்-பட்ட நுழைவுத் தேர்வு முறையை இந்தக் கல்வித் திட்டத்தின்மூலம் கொண்டு-வந்து ஒடுக்கப்-பட்ட மாணவர்களை கல்வியில் முன்னேற விடா-மல் தடுக்க ஒரு புதிய யுக்-தியைக் கையாண்டிருக்-கின்-றார். அனைத்து மாண-வர்களும் ஒன்று சேர்ந்து இந்தத் திட்-டத்தை இந்த ஆபத்தை முறியடித்தாக வேண்டும்.அன்று பெரியார் போராடினார்.மாணவர் சமுதாயம் இந்த பேரபாயத்தை உணர்ந்து இதை முறி-யடித்தாகவேண்டும். அப்பொழுதுதான் தாழ்த்-தப்பட்ட, பிற்படுத்தப்-பட்ட, கிராமப்புற மாணவ-மாணவிகள் நம்முடைய உரிமைகளைப் பெற முடியும்.எனவே, அனைத்து மாணவர் அமைப்பின் சார்பில் இன்றைக்குத் தொடங்கப்பட்டிருக்கின்ற போராட்டம் இது ஒரு தொடக்கம்தான். வெற்றி கிட்டும்வரை இந்த மாபெரும் போராட்டம் தொடரும். இவ்வாறு கலி.-பூங்குன்றன் பேசினார்.
மமக பொதுசெயலாளர் அப்துல் சமத் மற்றும் மாணவரணி செயலாளர் ஜைனுல் ஆபிதீன்

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது, பேசும்போது பெரியார் உருவாக்கிய சமூக நீதி போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும்.மத்திய அரசின் இந்த கயமைத்தனத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்தும் இந்த பேரணி போராட்டம் வெறும் தொடக்கம்தான் இன்னும் முழு வீச்சில் இப்போராட்டம் எழுச்சி பெரும் என்றார்.விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வீரமுத்து, திராவிடர் கழக மாநில மாணவரணி அமைப்பாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் பேசினர். புரட்சிகர இளை-ஞர் முன்னணி அமைப்பைச் சார்ந்த வீராளன் தலைமையிலும் மாணவர்-கள் பங்கேற்றனர். மாணவர்கள் பேரணி மன்றோ சிலையிலிருந்து புறப்பட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலை வரை ஆவேசத்துடன் ஒலி முழக்கங்களுடன் சென்று பின்னர் மாலை 5.00 மணி அளவில் புதிய தலைமை செயலகத்தை அடைந்தது.உடனே கபில் சிபலின் கொடும்பாவியாக அட்டைகளை மாணவர்கள் கொளுத்த காவல துறை உடனடியாக மாணவர்களை கலைந்து செல்ல கோரியது.எனினும் மாணவர்கள் அங்கேயே ஆர்பாட்டத்தில் இறங்கினர்.மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டன உரை ஆற்றினர்.தமுமுக மாணவரணி செயலாளர் ஜைனுல் ஆபிதீன்,விடுதலை சிறுத்தைகள் மாணவர் பொறுப்பாளர் இளங்கோ,புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் சிவா ஆகியோர் எழுச்சியோடு பேரணியின் நோக்கத்தை எடுத்துரைத்து தொடர்ந்து போராட்டம் நடக்கும் என்று அறைகூவல் விடுத்தனர்.இறுதியாக மாணவர் கூட்டமைப்-பின் ஒருங்கிணைப்பாளர் ச. பிரின்ஸ் இறுதியாக நன்றி கூறினார்.
இந்தியாவில் மீண்டும் மனுதர்ம கல்வித் திட்டத்தை புகுத்தும் மத்திய அமைச்சர் கபில்சிபலைக் கண்டித்தும், உயர்கல்வி தேசிய ஆணைய மசோதாவை எதிர்த்தும் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் அனைத்து மாணவர் பேரவை சார்-பில் மாணவர்கள் மன்றோ சிலை அருகில் கூடினர்.

ஒடுக்கப்பட்ட, கிராமப்-புற மாணவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் உயர்கல்வி தேசிய ஆணைய மசோதாவை-யும், மத்திய மனுதர்ம அமைச்சர் கபில்சிபலைக் கண்டித்தும் அரை மணி நேரம் ஒலி முழக்கமிட்டனர்.
பின்னர் அனைத்து மாணவர் கூட்டமைப்பினரான திராவிட மாணவர் கழகம், விடுதலை சிறுத்தைகள் மாணவர் பிரிவு, தமுமுக மாணவரணி, முஸ்லிம் லீக், சட்டக் கல்லூரி மாணவர்கள், புதுக்கல்லூரி மாணவர்-கள், நந்தனம் கல்லூரி மாணவர்கள், பச்சையப்-பன் கல்லூரி மாணவர்-கள் என மாணவர்கள் பேரணி-யாகப் புறப்படத் தயாராக இருந்தனர்.
திராவிடர் கழக பொதுச்-செயலாளர் கவிஞர் கலி.-பூங்குன்றன் மாணவர்களின் பேரணி தொடங்கி வைக்கும் முகமாக மாண-வர்களை வாழ்த்தியும், அனைத்து மாணவர் கூட்டமைப்பின் நோக்கத்தை விளக்கியும் பேசினார்.

அவரது உரையில் கூறியதாவது:இன்றைக்குத் தேசிய உயர்கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்தும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்ச-ரைக் கண்டித்தும் மாண-வர்கள் பேரணியாகப் புறப்பட்டு அவர்களு-டைய கோரிக்கைகளை வலி-யுறுத்த உள்ளனர்.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் அவர்கள் ஒரு புதிய கல்விக் கொள்கைத் திட்-டத்தை அறிவித்திருக்கிறார்.தாழ்த்தப்பட்ட, பிற்-படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் கல்வியில் முன்னேறவிடாமல் தடுக்க ஒரு புதிய சட்டத்தை, திட்டமிட்டு ஒரு சதிச் செயலை கபில்சிபல் உருவாக்கியிருக்கிறார்.நீண்ட காலமாக நாம் போராடிப் பெற்ற இடஒதுக்கீடு, சமூகநீதி தத்-துவத்தை குழிதோண்டிப் புதைக்கக் கூடிய திட்டம்-தான் இந்த கல்வித் திட்டமாகும்.தமிழ்நாட்டில் இருபத்-திரண்டு ஆண்டுகளாக நாம் போராடி, விரட்டப்-பட்ட நுழைவுத் தேர்வு முறையை இந்தக் கல்வித் திட்டத்தின்மூலம் கொண்டு-வந்து ஒடுக்கப்-பட்ட மாணவர்களை கல்வியில் முன்னேற விடா-மல் தடுக்க ஒரு புதிய யுக்-தியைக் கையாண்டிருக்-கின்-றார். அனைத்து மாண-வர்களும் ஒன்று சேர்ந்து இந்தத் திட்-டத்தை இந்த ஆபத்தை முறியடித்தாக வேண்டும்.அன்று பெரியார் போராடினார்.மாணவர் சமுதாயம் இந்த பேரபாயத்தை உணர்ந்து இதை முறி-யடித்தாகவேண்டும். அப்பொழுதுதான் தாழ்த்-தப்பட்ட, பிற்படுத்தப்-பட்ட, கிராமப்புற மாணவ-மாணவிகள் நம்முடைய உரிமைகளைப் பெற முடியும்.எனவே, அனைத்து மாணவர் அமைப்பின் சார்பில் இன்றைக்குத் தொடங்கப்பட்டிருக்கின்ற போராட்டம் இது ஒரு தொடக்கம்தான். வெற்றி கிட்டும்வரை இந்த மாபெரும் போராட்டம் தொடரும். இவ்வாறு கலி.-பூங்குன்றன் பேசினார்.
மமக பொதுசெயலாளர் அப்துல் சமத் மற்றும் மாணவரணி செயலாளர் ஜைனுல் ஆபிதீன்

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது, பேசும்போது பெரியார் உருவாக்கிய சமூக நீதி போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும்.மத்திய அரசின் இந்த கயமைத்தனத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்தும் இந்த பேரணி போராட்டம் வெறும் தொடக்கம்தான் இன்னும் முழு வீச்சில் இப்போராட்டம் எழுச்சி பெரும் என்றார்.விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வீரமுத்து, திராவிடர் கழக மாநில மாணவரணி அமைப்பாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் பேசினர். புரட்சிகர இளை-ஞர் முன்னணி அமைப்பைச் சார்ந்த வீராளன் தலைமையிலும் மாணவர்-கள் பங்கேற்றனர். மாணவர்கள் பேரணி மன்றோ சிலையிலிருந்து புறப்பட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலை வரை ஆவேசத்துடன் ஒலி முழக்கங்களுடன் சென்று பின்னர் மாலை 5.00 மணி அளவில் புதிய தலைமை செயலகத்தை அடைந்தது.உடனே கபில் சிபலின் கொடும்பாவியாக அட்டைகளை மாணவர்கள் கொளுத்த காவல துறை உடனடியாக மாணவர்களை கலைந்து செல்ல கோரியது.எனினும் மாணவர்கள் அங்கேயே ஆர்பாட்டத்தில் இறங்கினர்.மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டன உரை ஆற்றினர்.தமுமுக மாணவரணி செயலாளர் ஜைனுல் ஆபிதீன்,விடுதலை சிறுத்தைகள் மாணவர் பொறுப்பாளர் இளங்கோ,புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் சிவா ஆகியோர் எழுச்சியோடு பேரணியின் நோக்கத்தை எடுத்துரைத்து தொடர்ந்து போராட்டம் நடக்கும் என்று அறைகூவல் விடுத்தனர்.இறுதியாக மாணவர் கூட்டமைப்-பின் ஒருங்கிணைப்பாளர் ச. பிரின்ஸ் இறுதியாக நன்றி கூறினார்.
Wednesday, February 17, 2010
தலைமைச் செயலகம் முற்றுகை தமுமுக அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம் போரூர் ஷேக்மான்யம் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து தலைமை செயலகத்தை தமிழ்நாடு முஸ்ம் முன்னேற்றக் கழகம் 17-02-2010 அன்று முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அ தலைமை தாங்குகிறார்.

இதை எதிர்த்து செட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கற்களால் தாக்கினார்கள். இந்த தகவல் தமுமுகவினருக்கு கிடைக்க, மாவட்ட நிர்வாகிகளும், சகோதர அமைப்பினரும் சம்பவ இடத்தில் கூடினர். இதற்கிடையில் பள்ளிவாசலை சுற்றி 100லிக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு போட்டப்பட்ட னர். இந்த சம்பவம் இரு சமுதாயத்திற்கும் இடையை மதக்கலவரம் உருவாக்கும் சூழ்நிலையை உருவாக்கியது. காவல்துறையினர் முஸ்லிம் அமைப்பினரிடம் நாங்கள், அடக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். அதன் பின் அனைத்து முஸ்லிம் அமைப்பினரும் கலைந்து சென்றனர். இதற்கிடையில் 15.2.2010 அன்று காலை 5 மணியளவில் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அம்பத்தூர் தாசில்தார் முன்னிலையிலும், அடக்கப்பட்டிருந்த உடலை தோண்டி எடுத்து வேறு ஒரு பள்ளிவாசல் கபரஸ்தானில் அடக்கம் செய்துள்ளனர்.
இந்த உறுதி மீறல் செயல் முஸ்லிம்கள் மற்றும் பிற சமூக மக்களிடம் மிகுந்த அதிருப்தியும், வேதனையையும் அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சமூக அமைப்புகளிடம் இருந்து தொடர் போராட்டங்களை உருவாக்கியுள்ளது.

இதை எதிர்த்து செட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கற்களால் தாக்கினார்கள். இந்த தகவல் தமுமுகவினருக்கு கிடைக்க, மாவட்ட நிர்வாகிகளும், சகோதர அமைப்பினரும் சம்பவ இடத்தில் கூடினர். இதற்கிடையில் பள்ளிவாசலை சுற்றி 100லிக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு போட்டப்பட்ட னர். இந்த சம்பவம் இரு சமுதாயத்திற்கும் இடையை மதக்கலவரம் உருவாக்கும் சூழ்நிலையை உருவாக்கியது. காவல்துறையினர் முஸ்லிம் அமைப்பினரிடம் நாங்கள், அடக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். அதன் பின் அனைத்து முஸ்லிம் அமைப்பினரும் கலைந்து சென்றனர். இதற்கிடையில் 15.2.2010 அன்று காலை 5 மணியளவில் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அம்பத்தூர் தாசில்தார் முன்னிலையிலும், அடக்கப்பட்டிருந்த உடலை தோண்டி எடுத்து வேறு ஒரு பள்ளிவாசல் கபரஸ்தானில் அடக்கம் செய்துள்ளனர்.
இந்த உறுதி மீறல் செயல் முஸ்லிம்கள் மற்றும் பிற சமூக மக்களிடம் மிகுந்த அதிருப்தியும், வேதனையையும் அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சமூக அமைப்புகளிடம் இருந்து தொடர் போராட்டங்களை உருவாக்கியுள்ளது.
Sunday, February 14, 2010
Saturday, February 13, 2010
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... அன்பிற்கினிய மதுக்கூர் நண்பர்களே உங்கள் அனைவரயும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மதுக்கூர் கிளையின் சார்பாக இந்த பதிவின் மூலமாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் இனி தினமும் மதுக்கூரில் நடை பெரும் சமுதாய மற்றும் பொதுவான நிகழ்ச்சிகள் இந்த வலை தளத்தில் பதியப்படும். எங்களது பணிகள் தொடர எப்போதும் போல உங்களின் ஆதரவையும் ஆலோசனைகளையும் வழங்கிட வேண்டுகிறோம்...
Subscribe to:
Posts (Atom)
கருத்துக்களும் விமர்சனங்களும்
அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...