இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, October 1, 2014

மதுக்கூர் தமுமுக வின் முன் முயற்சி
மதுக்கூரில் ஏராளமான சகோதரர்கள் ஹஜ் பெருநாளைக்கு குர்பானி கொடுக்கின்றார்கள்.அப்படி குர்பானி கொடுக்கும் பிராணிகளின் தோலை நமதூரில் செயல்படும் பல அமைப்புகள்,இயக்கங்கள் (தமுமுக உட்பட) பெற்று அவரவர் தலைமையின் வழிகாட்டலின்படி அதை உரிய வழியில் பயன்படுத்துகின்றார்கள்.அனைத்து இயக்கங்கள்,அமைப்புகளை ஒருகிணைந்து நமதூர் ஜாமிய மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் தலைமையில் ஓர் குழு அமைத்து குர்பானி பிராணிகளின் தோல்களை வசூல் செய்து நமதூர் ஏழைகள் பயன்படும் வகையில் அதை உரியவர்களுக்கு பங்கீட்டு கொடுக்கலாம் என்ற நோக்கில் கடந்த வாரம் மதுக்கூர் ஜாமிய மஸ்ஜித் பரிபாலன கமிட்டி தலைவர் ஜனாப் முகைதீன் மரைக்காயர்,செயலாளர் ஜனாப் சதக்கத்துல்லா,மிப்தாஹுல் சங்க தலைவர் ஜனாப் அஜீஸ் ரஹ்மான்,செயலாளர் ஜனாப் ஹாஜா முகைதீன்,முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்க செயலாளர் ஜனாப் ஜபருல்லா,ஆகியோரை சந்தித்து இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் மதுக்கூர் ராசிக்,மதுக்கூர் நகர தமுமுக தலைவர் ஜபருல்லா,செயலாளர் பவாஸ்,மற்றும் நகர நிர்வாகிள் அளித்தார்கள்.








No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...