
காலை 10 மணி ஆகியும் நியாய விலை கடை திறக்க வில்லை, கடை ஊழியர்கள் எங்களிடம் தகாத வார்த்தைகளில் திட்டுகிறார்கள், பொருட்கன் எடை குறைவாக போடுகிறார்கள், போன்ற புகார்களோடு , தினந்தோறும் காலையில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்களுக்கு ஆம்பூர் பொதுமக்கள் போன் செய்த வண்ணம் இருந்தனர் , இதை தொடர்ந்து

கடந்த 14/12/11 அன்று தாலுக்கா அலுவலகத்தில் . வட்ட வழங்கல் அதிகாரி, தாசில்தார் ஆகியோர் முன்னிலையில் , ஆம்பூரில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களையும் அழைத்து அவசர கூட்டம் நடத்தினார், காலையில் 9 மணிக்கே எல்லா கடைகளைகளையும் திறக்கவேண்டும் என்றும், பொதுமக்களிடம் நல்லமுறையில் பேசவேண்டும் எனவும், எடை சரியாக இருக்க வேண்டும் என்றும், அறிவுரித்தியதோடு இதை மீறும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தார் , இந்த கூட்டத்தில் மமக மாவட்ட செயலாளர் நசீர், மாவட்ட பொருளாளர் மிஸ்பாஹ் , மமக நகர செயலாளர் ஹமீத், தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment